என் மலர்
நீங்கள் தேடியது "Selection of cricketers"
- வருகிற 23-ந் தேதி நடக்கிறது
- கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 16 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) ராணிப்பேட்டையில் உள்ள இ.ஐ.டி. பாரி மைதானத்தில் நடைபெற உள்ளது. 16 வயதிற்கு உட்பட்டோர் தேர்வு காலை 8 மணிக்கும், 19 வயதிற்கு உட்பட்டோர் தேர்வு மதியம் 1 மணிக்கும் நடைபெறும். தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வீரர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் வர வேண்டும்.
இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.






