search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seizure of ammunition"

    • நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அப்போது பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயியான சுந்தரராஜன் என்பவரது தோட்டத்தில் சோதனை செய்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பெரியேரிக்காடு பகுதியில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி தையல் நாயகி தலைமையிலான போலீசார், ஏற்காடு பெரியேரிக்காடு கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயியான சுந்தரராஜன் என்பவரது தோட்டத்தில் சோதனை செய்தனர். இதில், 2 நாட்டு துப்பாக்கி மற்றும் 2 கிலோ வெடிமருந்து, 3 கிலோ ஈயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விவசாயி சுந்தரராஜன், காட்டுப்பன்றி மற்றும் முயல் ஆகியவற்றை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஏற்காடு போலீசார், நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்தை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுந்தரராஜனை தேடி வருகின்றனர்.

    ×