என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விவசாய தோட்டத்தில் பதுக்கிய 2 நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்து பறிமுதல்
- நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அப்போது பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயியான சுந்தரராஜன் என்பவரது தோட்டத்தில் சோதனை செய்தனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பெரியேரிக்காடு பகுதியில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி தையல் நாயகி தலைமையிலான போலீசார், ஏற்காடு பெரியேரிக்காடு கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயியான சுந்தரராஜன் என்பவரது தோட்டத்தில் சோதனை செய்தனர். இதில், 2 நாட்டு துப்பாக்கி மற்றும் 2 கிலோ வெடிமருந்து, 3 கிலோ ஈயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விவசாயி சுந்தரராஜன், காட்டுப்பன்றி மற்றும் முயல் ஆகியவற்றை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஏற்காடு போலீசார், நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்தை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுந்தரராஜனை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்