search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seeds Sale"

    • விதை விவர அட்டை இல்லாமல் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம்.
    • உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஜாதாபாய் தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிமம் பெறாமலும், விற்பனை பட்டியல் இல்லாமலும். விதை விவர அட்டை இல்லாமலும் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம். ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர் தாங்கள் விற்கும் புதிய ரக விதை களுக்கு சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும், பதிவு எண் மற்றும் முளைப்புத் திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் விதைச் சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தாங்கள் விதைகளை வாங்கும்போது விதைச் சட்டம் 1966-ல் குறிப்பிட்ட 14 காரணிகளும் விவர அட்டையில் குறிப்பிடப்ப ட்டுள்ளதா? என்பதை உறுதி செய்த பின்னரே வாங்க வேண்டும்.

    மேலும். உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்தாலோ, விற்பனை பட்டியல் இல்லாமல் விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் தகுந்த உரிமம் பெறாமல் அல்லது உரிமம் புதுப்பிக்கா மல் விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் தங்கள் பகுதியில் உள்ள விதை ஆய்வாளர்களை அணுகி seedcertificationtn.gov.in என்ற வலைதள முகவரியில் முறையாக விண்ணப்பித்து பதிவு கட்டணம் செலுத்தி, உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இதற்கிைடயே நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளி யிட்டுள்ள மற்றொரு செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் பாப்பாக்குடி வட்டாரத்தி லும், தென்காசி மாவ ட்டத்தில் கடையம் மற்றும் கடையநல்லூர் வட்டாரத்திலும் கோடை நெல் சாகுபடியும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உளுந்து, பருத்தி மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடியும் மேற்கொள்ள விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர். தரமான விதைகளை பயன்படுத்துவதால் 15 முதல் 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கும். எனவே விதை வாங்கும் விவசாயிகள் கீழ்கண்ட அறிவுரைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

    விதைச்சான்றுத்துறை மூலம் விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை யாளரிடம் இருந்து மட்டுமே விதைகள் வாங்க வேண்டும். விதைக்குரிய விற்பனை பட்டியலை விற்பனையாளரிடம் கேட்டு வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் விற்பனையாளர் மற்றும் வாங்கும் விவசாயி கையொப்பம் இட வேண்டும்.

    ஒன்றுக்கு மேற்பட்ட ரகங்களை பயிர் செய்யு ம்போது விதை சிப்பங்களை தனித்தனியே ஊற வைக்க வேண்டும். வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் விற்பனை நிலையங்களில் ஏற்கனவே விநியோகி க்கப்பட்ட மற்றும் தற்சமயம் இருப்பில் உள்ள விதைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே விவசா யிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×