search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School students achievement"

    • குமார்நகர் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது.
    • சுதா மோகன் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான பீச் வாலிபால் போட்டி குமார்நகர் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் திருப்பூர் நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    இதன்படி மாணவர்களுக்கான சூப்பர் சீனியர் பிரிவு போட்டியில் பிளஸ்-2 மாணவர்கள் கிப்ஸன் சாமுவேல், விஜேஷ் ஆகியோர் வெற்றி பெற்று முதலிடமும், ஜூனியர் பிரிவு போட்டியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் சனோஜ், நிரஞ்சன் ஆகியோர் முதலிடமும், மாணவிகளுக்கான ஜூனியர் பிரிவு போட்டியில் செல்வதர்ஷினி, சாருநேத்ரா ஆகியோர் முதலிடமும் பிடித்தனர்.

    போட்டியின் அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளையும், பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் அருள், செபாஸ்டின் ஆகியோரையும் திருமுருகன் குழும தலைவர் டாக்டர் ஜி.மோகன், பள்ளி தாளாளரும், முதல்வருமான சுதா மோகன் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

    • கரூர் பரணி பார்க் கல்வி குழுமம் குரோத் அகாடமி போட்டி தேர்வு பயிற்சி மையத்துடன் இணைந்து 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான பயிற்சியை பள்ளியிலேயே நடத்தி வருகிறது.
    • விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார்.

    கரூர் :

    கரூர் பரணி பார்க் கல்வி குழுமம் குரோத் அகாடமி போட்டி தேர்வு பயிற்சி மையத்துடன் இணைந்து 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான பயிற்சியை பள்ளியிலேயே நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பரணி வித்யாலயா பள்ளி மாணவர் முகேஷ் 99.6 சதவீதமும், 636 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.

    மாணவி சிந்துஜா 99.5 சதவீதமும், 630 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார்.

    நீட் தேர்வில் தேசிய அளவில் அபார சாதனை படைத்த மாணவர் முகேஷ், மாணவி சிந்துஜாவின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் மற்றும் குரோத் அகாடமி பயிற்சி மைய ஆசிரியர்கள் ஆகியோரை பரணி பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர் சுபாஷினி, பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர், குரோத் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் கவிதா ராமசுப்பிரமணியன், துணை முதல்வர் பிரியா மற்றும் இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    ×