என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Santhanamariyamman Temple"
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பூர்ணாகுதி, பூஜையுடன் தொடங்கியது.
- விநாயகப் பெருமானுக்கும், மூலஸ்தான மூர்த்தி களுக்கும் சிறப்பு மகா அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் பிராயன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சந்தனமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பூர்ணாகுதி, பூஜையுடன் தொடங்கியது. மாலையில் சாஸ்தா கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு சந்திர ஹோரையில் யந்திர ஸ்தானம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் பூஜை நடைபெற்றது.
இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டாம் கால யாக பூஜையுடன், கும்பபூஜை, பிம்பசுத்தி, வேதிகை பூஜை, பூர்ணாகுதியாக சாலை நிறை தீபாராதனை நடைபெற்றது. யாகசாலையில் இருந்து கும்பம் எழுந்தருளி விமானம் மஹா கும்பாபி ஷேகம் நூதன ஆலயம், நூதன விமானம், நூதன விக்ரகம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமா னுக்கும், மூலஸ்தான மூர்த்தி களுக்கும், பரிவார தெய்வங்க ளுக்கும் மகா கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு மகா அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- விக்கிரமசிங்கபுரம் சந்தன மாரியம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற இருக்கிறது.
- இரவு 8 மணிக்கு கணியான் கூத்து, இரவு 8.30 மணிக்கு சப்பரம் ஏழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
கல்லிடைக்குறிச்சி:
விக்கிரமசிங்கபுரம்- பாபநாசம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அனைத்து சமுதாயத்திற்கும் பாதிக்கப்பட்ட சந்தன மாரியம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற இருக்கிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முதல் யாகசாலை பூஜையும், இன்று 2-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நாளை நூதன விமானம் ஜீர்னோதாரண அஷ்டபந்தனம் விழாவும் காலை 6 மணிக்கு மகர லக்கினத்தில் பரமாச்சி அம்மன், சந்தனமாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
காலை 11 மணிக்கு மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சியும் சிவந்திப்பர் கோவில் வெளி பிரகாரம் நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு கும்மி பாட்டு, இரவு 8 மணிக்கு கணியான் கூத்து, இரவு 8.30 மணிக்கு சப்பரம் ஏழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்