search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand robbery case"

    • வடமதுரை அருகே பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • மணல் திருட்டில் ஈடுபட்ட 3 லாரிகள் மற்றும் ஒரு ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்யப்பட்டது

    வடமதுரை:

    வடமதுரை, அய்யலூர், குஜிலியம்பாறை, பாளையம், எரியோடு, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    கிராமங்களில் உள்ள தென்னந்ேதாப்புகளில் மணல் பதுக்கி வெளி மாவட்டங்களுக்கு கடத்த–ப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இது குறித்து தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் வந்தநிலையில் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மண்டல புவியியல் அதிகாரி மாரியம்மாளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முத்தண்ணாங் கோட்டை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 3 லாரிகள் மற்றும் ஒரு ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இது குறித்து கம்பிளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் மற்றும் கார்த்திக், நந்தவனப்பட்டி பகுதியை சேர்ந்த மயி–ல்வாகனம், காமலாம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ், ரெட்டியார்சத்திரம் வெங்கடேஷ் , சுப்பிரமணி, தமிழ்அன்பு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வடமதுரை இன்ஸ்பெக்டர் நாகசாந்தி ஆலோசனையின்படி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காமராஜர் அணையில் குவாரி அமைத்து மணல் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் அருகே ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கப்பகுதி மற்றும் குடகனாற்று கரை பகுதியிலும், சீவல்சரகு ஊராட்சிப் பகுதியில் ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள குடகனாற்று பாலம் பகுதியிலும் வீரக்கல் ஊராட்சி பகுதியிலும் மணல் திருட்டு ஜோராக நடைபெறுகிறது.

    தற்போது பட்டப்பகலில் ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கத்திற்கு நீர் வரும் பாதையை உடைத்து கட்டிடப்பணிகளுக்காகவும், சாலைப் பணிகளுக்காகவும் மணல் திருட்டு படுஜோராக நடைபெற்று வருகிறது. பொக்லைன் எந்திரம் கொண்டு அணைக்கட்டில் குழிபறித்து மணலை எடுத்து, அதை சலித்து திருச்சி மணல் என கூறி விற்பனை செய்து வருகின்றனர்.

    பலமுறை ஆத்தூர் வருவாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் புகார் செய்தும், மணல் மற்றும் மண் திருட்டை கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் புகார் செய்கின்றனர். அணைக் கட்டுக்குள் மணலை திருடி குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர். இரவு நேரங்களில் டிராக்டர், டிப்பர் லாரிகள் மூலம் எடுத்துச் செல்கின்றனர்.

    இதனால், காமராசர் நீர்த்தேக்கத்தில் நிலத்தடி நீர்மட்டமும், விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக விவசாயிகள் புகார் செய்கின்றனர். மேலும், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் ஆத்தூர் வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலரை மாற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.

    ×