search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabha building"

    • கிராமசபை கட்டிடத்தில் பேட்டரிகள் திருடப்பட்டது.
    • ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் கொடிக்குளம் ஊராட்சி செயலர் ஜெகநாதன் புகார் செய்தார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ளது கொடிக்குளம். இங்கு ஊராட்சிக்கு சொந்தமான கிராம சபை கூட்ட அரங்கம் உள்ளது.

    இந்த கட்டிடத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த 3 யு.பி.எஸ். பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் கொடிக்குளம் ஊராட்சி செயலர் ஜெகநாதன் புகார் செய்தார். அதன் பேரில் ஒத்தக்க டை இன்ஸ்பெ க்டர் சுகுமாறன், சிறப்பு சப்-இன்ஸ்பெ க்டர் பாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பேட்டரிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    ×