search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.87 lakh 90 thousand"

    • கொடுமுடி , எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தேங்காய், கொப்பரை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.87 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்பனையாகின.

    ஈரோடு:

    கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் 10 ஆயிரத்து 267 எண்ணிக்கையிலான 3 ஆயிரத்து 711 கிலோ எடை கொண்ட தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்று க்கு குறைந்தபட்ச விலையாக ரூ.19.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.23.65 காசுகள், சராசரி விலையாக ரூ.22.70 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் 82 ஆயிரத்து 601 ரூபாய்க்கு விற்பனையாகின.

    இதனை யடுத்து நடந்த தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 835 மூட்டைகள் கொண்ட 40 ஆயிரத்து 340 கிலோ எடைகொண்ட தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட் சவிலையாக ரூ.77.95 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.78.98 காசுகள், சராசரி விலையாக ரூ.78.70 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.60, அதிகபட்ச விலையாக ரூ.76.49 காசுகள், சராசரி விலையாக ரூ.74.39 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.30 லட்சத்து 19 ஆயிரத்து 114 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் தேங்காய் மற்றும் தேங்காய்பருப்பு சேர்த்து ரூ.31 லட்சத்து 1 ஆயிரத்து 715-க்கு விற்பனையாகின.

    இதேபோல எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூ டத்தில்74 ஆயிரத்து 398 கிலோ எடையுள்ள தே ங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.78.85 காசு கள், அதிகபட்ச விலையாக ரூ.81, சராசரி விலையாக ரூ.79.99 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.60.15 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.74.66 காசுகள், சராசரி விலையாக ரூ.73.36 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.56 லட்சத்து 88 ஆயிரத்து 779-க்கு விற்பனையானது.

    மொத்தம் கொடுமுடி , எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.87 லட்சத்து 90 ஆயிரத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனையாகின.

    ×