search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.50 thousand at"

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • ரூ.50 ஆயிரத்து 841-க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,280 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 28 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்ச விலையாக 31 ரூபாய் 19 காசுக்கும், சராசரி விலையாக 29 ரூபாய் 29 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 1,813 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.50 ஆயிரத்து 841-க்கு விற்பனையானது.

    ×