search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs. 70 lakhs"

    • புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி பகுதியில் வாரச்ச ந்தை புதன் மற்றும் வியாழ க்கிழமைகளில் கூடுகிறது.
    • மொத்தம் ரூ.70 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி பகுதியில் வாரச்ச ந்தை புதன் மற்றும் வியாழ க்கிழமைகளில் கூடுகிறது. இந்த சந்தை தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தை யாக திகழ்ந்து வருகிறது.

    இந்த சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், மற்றும் தாராபுரம், மேட்டுப்பா ளையம் மற்றும் புளியம்பட்டி சுற்றுப் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம ங்களில் இருந்தும் விவசாயி கள் கால்நடை களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    மேலும் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநி லங்களில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியா பாரிகள் வந்து கால்நடை களை வாங்கி செல்கிறார்கள்.

    இந்நிலையில் இந்த வாரம் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 நாட்களில் கூடிய மாட்டு சந்தையில் ஜெர்சி இன மாடுகள் ரூ.45 ஆயிரம் வரையும், சிந்து இன மாடுகள் ரூ.48 ஆயிரம் வரையும் எருமை மாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனையானது.

    இதில் நாட்டுமாடுகள் ரூ.65 ஆயிரம் வரையும் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ. 5 ஆயிரம் முதல்ரூ.12 ஆயிரம் வரையும் விற்பனை யானது. மேலும் எடை க்கேற்ப வெள்ளாடு ரூ.7 ஆயிரம் வரையும், செம்மறி ஆடுகள் ரூ.6 ஆயிரம் வரையும் வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதில் மொத்தம் ரூ.70 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×