search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs. 3 lakh 79 thousand"

    • மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 179-க்கு விற்பனையானது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 14 ஆயிரத்து 280 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 662 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.23.20 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.26.19 காசுகள், சராசரி விலையாக ரூ.25.80 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 568-க்கு விற்பனையானது.

    இதனையடுத்து தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் 99 மூட்டைகள் கொண்ட 3 ஆயிரத்து 101 கிலோ எடையுள்ள தேங்கா ய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.74.29 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.78.89 காசுகள், சராசரி விலையாக ரூ.77.85 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம்தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.58.89 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.72.49 காசுகள், சராசரி விலையாக ரூ.68.10 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 707-க்கு விற்பனைது.

    மொத்தம் தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 179-க்கு விற்பனையானது.

    ×