search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roundana"

    • நான்கு வழி சந்திப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.
    • அங்காளம்மன் கோவில் இடமானது குன்னத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமானதாகும்.

    ஊத்துக்குளி:

    குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கொமரசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜோதிமணி சோமசுந்தரம், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குன்னத்தூர் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள நான்கு வழி சந்திப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும். இதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் இடமானது குன்னத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமானதாகும்.

    அந்த நிலத்தில் ஊத்துக்குளி சாலையையொட்டி மேற்புறம் 4 மீட்டர் அகலத்திலும், கோவிலில் வடபுறம் பெருமாநல்லூர் சாலையை ஒட்டி 4 மீட்டர் அகலத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா அமைப்பதற்கு ஏதுவாக நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • 5 ரோடுகள் சந்திப்பு பகுதியில் இரு ஆண்டுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1.50 கோடி செலவில், ரவுண்டானா அமைக்கப்பட்டது.
    • புற்கள், செடிகள் அமைத்து அழகுபடுத்தாமல் விடப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை பஸ் நிலையம் அருகே, 5 ரோடுகள் சந்திப்பு பகுதியில் இரு ஆண்டுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1.50 கோடி செலவில், ரவுண்டானா அமைக்கப்பட்டது.ஆனால் இப்பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. புற்கள், செடிகள் அமைத்து அழகுபடுத்தாமல் விடப்பட்டது.

    போதை ஆசாமிகள் புகலிடமாகவும், பிளக்ஸ்பேனர்கள் வைக்கும் மையமாகவும், அலங்கோலமாக காணப்பட்டது.நகரின் மையத்திலுள்ள ரவுண்டானாவை அழகுபடுத்த வேண்டும் என 2 ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் நகராட்சி சார்பில் ரவுண்டானாவை அழகுபடுத்தும் வகையில் செம்மண் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இங்கு புற்தரை மற்றும் அழகான செடிகள் அமைத்து அழகுபடுத்தவும், சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாக்கவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் ராஜேந்திரா ரோடு மற்றும் பழநி ரோடு மையத்தடுப்புகளிலும் புற்கள், செடிகள் வைத்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    ×