search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rightful"

    • ரூ.1½ கோடி மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • பல்வேறு வகையில் பணம் இழக்க நேர்ந்தால் சைபர் கிரைம் எண் 1930 என்ற இலவச அழைப்பில் அழைக்கவும்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையம் கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவான செல்போன்கள் திருட்டு தொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டு வந்தன.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் உத்தர வின்பேரில் மாவட்டத்தில் திருட்டுப்போன செல்போன் கள் குறித்து தீவிர விசா ரணை நடத்தப்பட்டது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் திருட்டுப்போன ரூ.13 லட்சத்து 81 ஆயிரத்து 750 மதிப்புள்ள செல்போன் கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் துரித நடவடிக்கையால் இதுவரை ரூ.1 கோடியே 58 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள 1107 செல்போன்கள் கைப்பற்றப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வங்கி மோசடி தொடர்பான புகாரில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 2 மாதத்தில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 406 ரூபாய் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. இது வரை ரூ.44 லட்சத்து 28 ஆயிரத்து 805 உரியவர்க ளுடைய வங்கி கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    வங்கியில் இருந்து பேசுவ தாக கூறி ஏமாற்றும் நபர்க ளிடம் விழிப்புணர்வோடு இருக்கவும், வங்கி கணக்கு எண், சிவிவி மற்றும் ஓடிபி போன்ற விபரங்களை முன் பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், பணம் இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் மொபைல் ஆப்களை நம்பி யும், ஆன்லைன் வேலை வாய்ப்பு வாக்குறுதியை நம்பியும், முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் பல்வேறு வகையில் பணம் இழக்க நேர்ந்தால் சைபர் கிரைம் எண் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார். அளிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் தெரி வித்துள்ளார்.

    ×