என் மலர்
நீங்கள் தேடியது "Retail business in"
- இன்று சில்லரை வியாபாரம் 25 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- அடுத்த மாதம் தொடர் விசேஷங்கள் வர உள்ளதால் வியாபாரம் சூடு பிடிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது.
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்து துணிகளை வாங்கி செல்வார்கள். சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் கூடுதலாக வியாபாரம் நடைபெறும்.
இந்நிலையில் இன்று கூடிய ஜவுளி சந்தையில் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வெளி மாநில வியாபாரிகள் வந்திருந்து துணிகளை வாங்கி சென்றனர்.
இதனால் மொத்த வியாபாரம் 30 சதவீதம் அளவு நடைபெற்றது. ஆனால் அதே நேரம் சில்லரை வியாபாரம் மந்தமாகவே நடைபெற்றது.
தற்போது அய்யப்ப சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமானோர் விரதம் இருந்து வருகின்றனர். இதனால் காவி வெட்டி, துண்டு, சட்டை வியாபாரம் ஓரளவு நடைபெற்றது. இன்று சில்லரை வியாபாரம் 25 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த மாதம் தொடர் விசேஷங்கள் வர உள்ளதால் வியாபாரம் சூடு பிடிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.






