search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "resorts"

    மாயார் வழித்தடத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யாத 10 ரிசார்ட்டுகளுக்கு நோட்டீஸ் வழங்கி சீல் வைக்கப்பட உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடங்கள் தொடர்பான வழக்கில் மாயார் யானைகள் வழித்தடத்திலுள்ள 39 ரிசார்ட்டுகளை முதல் கட்டமாக மூடி சீல் வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது. இதில் மசினகுடியில் உள்ள 12 ரிசார்ட்டுகளின் உரிமையாளர்கள் தங்களிடம் ஆவணம் உள்ளதாக தெரிவித்ததால் அதனை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பிக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.மீதமுள்ள 27 ரிசார்ட்டு களுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி 12 ரிசார்ட்டுகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் முறையான அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள் குறைந்த அளவே இருந்தது.மேலும் சில ஆவணங் களை கூடுதலாக அளிப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு நேற்று மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அவகாசம் முடிந்ததால் 10 ரிசார்ட்டுகளுக்கும் சீல் வைக்கப்படும் என தெரிகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா கூறும் போது, மாயார் வழித் தடத்திலுள்ள 39 ரிசார்ட்டுகளில் 27 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டு விட்டது.

    12 ரிசார்ட்டுகளின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு வந்தது. இதில் 10 ரிசார்ட்டுகளின் ஆவணங்கள் முறையாக இல்லாததால் அவற்றை காலி செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) நோட்டீஸ் அனுப்பப்படும்.

    இந்த ரிசார்ட்டுகளுக்கு நாளை சீல் வைக்கப்படும். மற்ற 2 ரிசார்ட்டுகளின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு வருகிறது என்றார். #tamilnews
    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டியிருந்த மேலும் 10 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டத்தில் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர், சிங்காரா மற்றும் முதுமலை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது.

    யானைகளின் வழித் தடங்களான மசினகுடி, மாயார், மாவல்லா, வாழைத்தோட்டம், பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் உள்ளது. இவைகள் யானைகள் வழித்தடத்தை மறித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.

    மேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கு ஜூலை 12-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் யானை வழித்தடம் குறித்த செயல் திட்டத்தை நீலகிரி மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இருந்தனர். அதன்படி கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில் யானைகள் வழித்தடங்களில் 39 ரிசார்ட்டுகள் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 27 ரிசார்ட்டுகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்கவும், 12 ரிசார்ட் உரிமையாளர்கள் கலெக்டரிடம் 48 மணி நேரத்தில் ஆவணங்களை சமர்பிக்க அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து யானை வழித் தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 27 ரிசார்ட்டுகள் சீல் வைக்கப்பட்டது. கோர்ட்டு அவகாசம் வழங்கிய 12 ரிசார்ட் உரிமையாளர்கள் ஆவணங்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினர். ஆவணங்களை கலெக்டர் ஆய்வு செய்த போது 10 ரிசார்ட்டுகளின் ஆவணங்கள் முறையாக இல்லை. எனவே இந்த 10 ரிசார்ட்டுகளை சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    மீதமுள்ள 2 ரிசார்ட்டுகளின் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    ஊட்டியில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த 27 விடுதிகளை அப்புறப்படுத்தியதை கண்டித்து மசினகுடியை சுற்றியுள்ள பொதுமக்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மசினகுடி, சோலூர், உல்லத்தி, கடநாடு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் விடுதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    அப்போது 39 தனியார் விடுதிகள், 390 குடியிருப்புகள், அரசு கட்டிடங்கள் என 821 கட்டிடங்கள் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் முதல்கட்டமாக யானை வழித்தடத்தில் உள்ள 39 விடுதிகளில் 27 விடுதிகளை 48 மணி நேரத்திற்குள் சீல் வைக்குமாறு உத்தரவிட்டடனர்.

    மீதி உள்ள 12 விடுதிகளின் ஆவணங்களை 48 மணி நேரத்திற்குள் சரி பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து யானை வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 27 விடுதி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் வழங்கிய 48 மணி நேரத்தில் விடுதியை சீல் வைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

    ஊட்டி ஆர்.டி.ஒ. சுரேஷ் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட உள்ளாட்சி, வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் அடங்கிய 3 குழுவினர் மசினகுடி, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 27 விடுதிகளுக்கு சீல் வைத்தனர்.

    பொக்காபுரம் பகுதியில் உள்ள விடுதியை சீல் வைத்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் உரிமையாளர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். அதன் பின்னர் அதிகாரிகள் விடுதியில் உள்ள அனைத்து அறைகளுக்கும் தனித்தனியாக சீல் வைத்தனர்.

    இதே போல் 27 விடுதிகளுக்கும் அங்குள்ள அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இரவு 7.30 மணி வரை சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

    மசினகுடியில் 27 விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மசினகுடி பொதுமக்கள் 3 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

    இன்று முதல் (13-தேதி) 15-ந் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. அதே போல் சுற்றுலா வாகனங்களை இயக்காமலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமலும் போராட்டம் நடத்த போவதாகவும் பொதுமக்கள் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. மசினகுடி, மாவநல்லா, வாழைத்தோட்டம், சொக்க நல்லி, பொக்காபுரம், தொட்டலிங்கி, மாயார் மற்றும் மசினகுடியை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் சுற்றுலா வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
    ×