search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Request to take"

    • திமன்றங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சிவகங்கை மாவட்ட வக்கீல் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் நெல்சன் ஜீவா வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைசெயலாளர் இளையராஜா தொடக்க உரையாற்றினார்.

    சிவகங்கை வழக்கறி ஞர்கள் சங்க தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சித்திரைச்சாமி' பொரு ளாளர் செல்வராஜ், இணை செயலாளர் மணிகண்டன், அரசு வழக்கறிஞர்கள் அழகர்சாமி, பிரபாகர், ஸ்ரீசாய் சுந்தர், துஷாந்த் பிரதீப்குமார், நிர்மலா, சேகர் ஆகியோர் பேசினர். மாவட்ட துணை தலைவர் அஜீதாகூர் குற்றவியல் விசாரணை பற்றி கருத்துரையாற்றினார்.

    மாநில பொதுச் செயலா ளர் முத்து அமுதநாதன் நிறைவுரை ஆற்றினார். மாநாட்டில் மாவட்ட தலைவராக ராஜசேகரன், மாவட்ட செயலாளராக மதி, மாவட்ட பொருளாளராக சொர்ணம், மாவட்ட துணை தலைவர்களாக கமலதயாளன், அஜூ தாகூர், மாவட்ட துணை செயலாளர்களாக நெல்சன் ஜீவா, இளைய ராஜா, மாவட்ட குழு உறுப்பினர்களாக சகாய சுதாகர், காளைஈஸ்வரன், நிருபன் சக்ரவர்த்தி, சரவணன், ஜேம்ஸ் ராஜா, தீபா, துரைபாண்டி, பூர்ணிமா, சுசீலா, செந்தில்வேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    வழக்கறிஞர்கள் சேம நல நிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்மாகை வட்டத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு சொந்தமாக நீதிமன்ற கட்டிடங்கள் கட்டி தர வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், சுத்தமான குடி தண்ணீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக்க சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.

    ×