search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Removal of loud"

    • ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈரோடு பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஏர்ஹாரன் பயன்படுத்திய 20 பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு சரக போக்குவரத்து துணை ஆணையர் சுரேஷ் உத்தரவுப்படி, ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பதுவைநாதன் தலைமையில் ஆய்வாளர்கள் சுரேந்திரகுமார், சிவகுமார், மாசுகட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞான அதிகாரி தேவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஈரோடு பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதிக ஒலி எழுப்பி, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஏர்ஹாரன் பயன்படுத்திய 20 பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன.

    பிற குறைபாடுகள் கண்டறியப்பட்ட பஸ்களுக்கு, தணிக்கை அறிக்கை வழங்கி, அபராதம் விதிக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    ×