search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Removal of encroachment shops"

    • வியாபாரிகள் முற்றுகை
    • வேலூர் அடுக்கம்பாறையில் பரபரப்பு

    வேலூர்

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரி முன்பு உள்ள மூஞ்சூர்பட்டு சாலையில் நோயாளிகள் நடந்து செல்ல வசதியாக நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆக்கிமிரப்பு அகற்றம்

    இந்த நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்ப ட்டுள்ளன. டிபன் கடை துணிக்கடை பங்க்கடை என 50-க்கும் மேற்பட்ட கடைகள் நடைபாதை ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

    இன்று காலை பென்னாத்தூர் பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை ஒட்டி மூஞ்சூர்பட்டு சாலையில் வைக்க ப்பட்டிருந்த கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முற்றுகையில் ஈடுபட்டனர்.

    பரபரப்பு

    இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் செந்தில், பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இறுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றியதன் மூலம் ஆஸ்பத்திரி முன்பு சாலை அகலமாக காட்சியளித்தது. இவ்வளவு பெரிய சாலை இருந்ததா என்று ஆச்சரியத்துடன் பார்க்கும் வகையில் சாலை அனைவரும் கடந்து செல்ல வசதியாக இருந்தது.

    இந்த இடத்தில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×