search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "registrations canceled"

    • 2000 போலி பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
    • கிழக்கு யூனியன் சேர்மன் மணி மேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் செட்டிக்குளத்திலும், சக்கிமங்கலத்திலும் சுகாதா ரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதா வது:-

    இந்த மருத்துவ முகாம்க ளில் அனைத்து நோய்க ளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் வழங்கப்படும். தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவல கத்தில் பத்திர எழுத்தா ளர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவர்களது பணி வெளியிலேயே முடிந்து விடுகிறது. பொதுமக்களே நேரடியாக வந்து பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக தான் இதுபோன்ற நடவடிக் கைகள் மேற்கொள்ளப் படுகிறது.

    பத்திரப்பதிவு செய்ய வரும் யாரும் பணம் கொண்டுவர வேண்டாம். ஆன்லைன் மூலமாகவே செலுத்திக் கொள்ளலாம். பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் பதிவு செய்பவர்களை தவிர யாரும் வரக்கூடாது. குறிப்பாக இடைத்தரகர் களுக்கு இடமில்லை. 50 லட்சம் மதிப்பிற்கு மேலான சொத்துக்கள் பதிவு செய்யவும், கள ஆய்வு செய்யவும் அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்படு வார்கள்.

    போலி பத்திரப்பதிவு ரத்து சட்டத்தின்படி 2000 பதிவுகள் ரத்து செய்யப்பட்டு ள்ளது. மேலும் 14 ஆயிரம் மனுக்களும் வந்துள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.மக்களுக்கு எது தேவையோ அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான அரசு செய்து வரு கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக விழாவில் மண்டலத்தலைவர் வாசுகி சசிகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரிய கலா கலாநிதி, மேற்கு யூனியன் சேர்மன் வீரராக வன், கிழக்கு யூனியன் சேர்மன் மணி மேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×