search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Red Hills youth murder"

    செங்குன்றம் அருகே மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த தம்பியை அடித்து கொன்ற அக்காள்-கணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பொன்னேரி:

    சோழவரம் அருகே உள்ள மாவுத்கான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 37). கூலி தொழிலாளி. இவரது அக்காள் தனலட்சுமி (வயது 42). இவரது கணவர் ரவி (51). இவர்கள் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள்.

    பூபாலனுக்கு திருமணம் ஆகாததால் அக்கா தனலட்சுமியின் வீட்டிலேயே வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக பூபாலன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.

    மதுவுக்கு அடிமையான அவர் அடிக்கடி மதுகுடிக்க பணம் கேட்டு அக்காளை தொந்தரவு செய்து வந்தார்

    நேற்று முன்தினம் இரவு பூபாலன் மதுபோதையில் வீட்டுக்கு சென்றார். மேலும் மது குடிப்பதற்காக அக்காவிடம் பணம் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தனலட்சுமி, கணவர் ரவி, அவர்களின் மகள்கள் வெண்மதி, மஞ்சு, மகன் வல்லரசு ஆகியோர் சேர்ந்து பூபாலனை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனால் பயந்து போன அவர்கள் பூபாலன் மீது இருந்த ரத்த காயங்களை மறைத்தனர். அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்ததாக உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர்.

    பின்னர் பூபாலனின் இறுதி சடங்கிற்காக ஏற்பாடுகள் நடந்தன. அப்போது தனலட்சுமி மற்றும் அவர்களின் குடும்பதினரின் நடவடிக்கையால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு விரைந்து சென்று பூபாலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை செய்த போது பூபாலனை கொலை செய்ததை தனலட்சுமியும், அவரது குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி, அவரது கணவர் ரவி, மகன் வல்லரசு, மகள்கள் வெண்மதி, மஞ்சு ஆகியோரை கைது செய்தனர்.
    ×