என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recovery of 25.30 acres of land"

    • குலவிளக்கு ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 25.30 ஏக்கர் நிலம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது.
    • இந்து அறநிலையத்துறை குழுவினர் சம்பந்தப்பட்ட நிலங்களை அளவிட்டு ஆய்வு செய்து அப்பகுதியில் மீட்பு பலகையினை நட்டனர்.

    கொடுமுடி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் குலவிளக்கு ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 25.30 ஏக்கர் நிலம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது.

    இதை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பயன்படுத்தி வந்தனர். இது குறித்து பல்வேறு வழக்குகளும் நடந்து வந்தன.

    இந்நிலையில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் அன்னக்கொடி, தாசில்தார் கவுசல்யா, ஓய்வு பெற்ற தாசில்தார்கள் பழனிசாமி, அழகு ராஜன், செயல் அலுவலர் கீதா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட நிலங்களை அளவிட்டு ஆய்வு செய்து அப்பகுதியில் மீட்பு பலகையினை நட்டனர்.

    அதில் குலவிளக்கு கிராமத்தில் 25.30 ஏக்கர் நிலம் பாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்த மானது. அந்நியர்கள் யாரும் நுழையக்கூடாது என்று பெயர் பலகை வைக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் சிவகிரி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    ×