என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recovery from the dead body in the lake"

    • மீன் பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த பரதராமி பகுதியை சேர்ந்தவர் ரகு ( வயது 57 ) , கூலித் தொழிலா ளியான இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

    பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலை யில் நேற்று முன்தினம் ஏரியில் ஆண் பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் திமிரி போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர்.

    இதனைத் தொடர்ந்து சம் பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத் தைக் கைப்பற்றி விசாரணை செய்ததில் பரதராமியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரகு என்பது தெரிய வந்தது.

    அவரது உடலை பிரேத பரி சோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரகு எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×