search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ration shop employee hosue robbery"

    மேலூர் அருகே பட்டப்பகலில் ரேசன் கடை ஊழியர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 30 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 57). இவர் வெள்ளளூரில் உள்ள கூட்டுறவு சங்க ரேசன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று காலை சாமிநாதன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் பட்டப்பகலில் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 30 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    கோவிலுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய சாமிநாதன் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    ×