என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ramayam"
- ஆடி மாதத்தின் தொடக்கமான நேற்று லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவிலின் சார்பில் ராமாயண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கியது.
- லட்சுமி யம்மன் கோவில், கீழநவ்வ லடிவிளை நாராயணசாமி கோவில் ஆகிய இடங்களிலும் ராமாயணம் வாசித்தல் தொடங்கியது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் ஆடி மாதம் முழுவதும் தினசரி இரவு ராமாயண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதன்படி ஆடி மாதத்தின் தொடக்கமான நேற்று லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவிலின் சார்பில் ராமாயண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கியது.
கோவில் நிர்வாகிகள் தன சேகரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ராஜேஷ், பிரகாஷ், பால்பாண்டி, பேச்சிமுத்து ஆகியோர் ராமாயண ஏடு வாசிப்பை தொடங்கினர். இதேபோல் லட்சுமி யம்மன் கோவில், கீழநவ்வ லடிவிளை நாராயணசாமி கோவில் ஆகிய இடங்களிலும் ராமாயணம் வாசித்தல் தொடங்கியது.
பேயன்விளை ராமர் கோவிலில் நடந்த நிகழ்ச்சி க்கு ஊர் பிரமுகர்கள் ராஜாமணி, அரசகுரு, அழகேசன், ராஜேஷ், சந்திரசேகரன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகணேசன் ராமாயண ஏடு வாசிப்பை தொடங்கி வைத்தார். தங்க கண்ணன் பூஜை வழி பாடு நடத்தினார். ஊர் தலைவர் கோபிகிருஷ்ணன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்