search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Gandhi Murderd Case"

    கடந்த மே மாதம் 28-ந் தேதி சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த காவலுடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
    திருப்பத்தூர் :

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். சிறுநீரகத் தொற்று, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக பரோல் வழங்க வேண்டி அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பியிருந்தார். மனுவை பரிசீலித்த முதல்வர் 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 28-ந் தேதி சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த காவலுடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

    பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு பலத்த காவலுடன் சென்று கையெழுத்திட்டு வந்தார். மேலும் டாக்டர்ககளின் ஆலோசனைப்படி கிருஷ்ணகிரி, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    அவரது தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் பொருள் காலம் முடியும் தருவாயில் மீண்டும் பரோல் நீட்டிக்க கோரி தமிழக அரசுக்கு மனு அளித்து வந்தார். அதன்படி 5 முறை பரோல் நீட்டிக்கப்பட்டு இன்றுடன் (வியாழக்கிழமை) முடிந்து சென்னை புழல் சிறைக்கு பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட இருந்தார்.

    இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மேலும் பரோல் நீட்டிக்க மனு அனுப்பி இருந்தார். அதனை பரிசீலித்த தமிழக அரசு பேரறிவாளனுக்கு 6-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து நேற்று தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    புதுடெல்லி:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு வருகிற டிசம்பர் 7-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. வழக்கை விரைந்து விசாரிக்க பேரறிவாளன் தரப்பு விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டுள்ளது.
    ×