search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Gandhi Jyoti Yatra"

    • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை கடந்த 15-ந்தேதி பெங்களூரில் இருந்து தொடங்கியது.
    • வருகிற 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் முடிவடைகிறது.

    நெல்லை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை கடந்த 15-ந்தேதி பெங்களூரில் இருந்து தொடங்கி வருகிற 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் முடிவடைகிறது.

    இதனையொட்டி கன்னியாகுமரியில் இருந்து இன்று நெல்லைக்கு வந்த ஜோதி யாத்திரை குழுவினரை நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை யில் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் காங்கிரசார் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கவி பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் முரளி ராஜா, மண்டல தலைவர்கள் ராஜேந்திரன், ரசூல் மைதீன், துணைத் தலைவர்கள் வெள்ள பாண்டியன், குறிச்சி கிருஷ்ணன், உக்கிரன் கோட்டை செல்லபாண்டி, சிவன் பெருமாள், பாளை பகுதி மகாராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்க லிங்க குமார், பரணி சேகர், உதயகுமார், அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன், மாவட்ட மகளிர் அணி தலைவி ஸ்டெல்லா மேரி, துணைத்தலைவி மெட்டில்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×