search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajini politics"

    எம்ஜிஆர் ஒரு தெய்வப்பிறவி என்றும் தமிழக அரசியலில் அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். #Rajinikanth #RajiniPolitics
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- வளர்ந்துவரும் காலங்களில் பிற நடிகர்களின் கட் அவுட்களை பார்த்து உங்களுக்கும் கட்-அவுட் வைக்கும் கனவுகள் வந்ததா?

    பதில்:- ஆமாம். ஆனால் அவை நிஜமாக மாறும்போது பெரிய மகிழ்ச்சி இல்லை. எப்போதுமே கனவாக இருப்பது நிஜமாகும் போது அவ்வளவு ஈர்ப்பு இருக்காது. இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். கல்யாணத்தையும் சேர்த்து. எல்லாமே மாயை தான்.

    கே:- 2.0 படத்தில் ரோபோவில் ஸ்டைல் கொண்டு வந்தது எப்படி?

    ப:- எல்லா பெருமையும் ‌ஷங்கரையே சேரும். நல்லவேளை என்னோட நல்ல நேரம் அவர் நடிப்பு பக்கம் வரவில்லை. அவரது கடின உழைப்பு தான் எல்லாவற்றிற்கும் காரணம். அவர் செய்ததைப் பார்த்தால் நான் ஒண்ணுமே செய்யலை. ஸ்டைல் பண்ணவேண்டும் என்று நான் இப்போது எதையும் செய்வது கிடையாது.

    கே:- மக்களிடம் உங்கள் மீது ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பை எப்படி உருவாக்குகிறீர்கள்?

    ப:- (மேலே கையை காட்டி) ஆண்டவன் தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

    கே:- நீங்கள் சாதாரண நபர் இல்லை என்பதை உணர்ந்தது எப்போது?

    ப:- திடீர் என்று பணம், புகழும் வந்தது. அப்போது நாம தனிப்பிறவியோ.. ஆண்டவன் நம்மை தனியா உருவாக்கிட்டானோன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. பின்னர்தான் எல்லாமே நேரம் என்று உணர முடிந்தது. 60களில் நடிக்க வந்திருந்தால் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு முன்பு நம்மால் நிலைத்து நின்று இருக்க முடியாது. இந்த உண்மை புரிந்தபிறகு இயல்பாகி விட்டேன்.

    கே:- எந்த கதாநாயகனுக்காகவாவது முதல் நாள் முதல் காட்சிக்கு சிரமப்பட்டு பார்த்தது உண்டா?

    ப:- பெங்களூருவில் எம்ஜிஆர் படம் ஒன்றுக்கு சவால் விட்டு அப்படி காலை 4.30 மணிக்கு சென்று டிக்கெட் எடுத்து பார்த்து இருக்கிறேன்.

    கே:- எந்த வி‌ஷயம் உங்களை மிகவும் பாதிக்கும்?

    ப:- குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது மனதை மிகவும் பாதிக்கும். குழந்தைகளை சுயநலத்துக்காக பயன்படுத்துகிறவர்களை நடுரோட்டில் நிற்க வைத்து சுடவேண்டும்.


    கே:- எம்ஜிஆரின் இடத்தை நிரப்ப வருகிறீர்களா?

    ப:- இல்லை. அவர் ஒரு தெய்வப்பிறவி. அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது. அவரை பார்த்து மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் நெருக்கத்தில் செல்ல செல்ல அது அதிகமானது.

    கே:- கமலை பாராட்டிக் கொண்டே இருப்பது எப்படி?

    ப :- கமல் எனக்கு முன்பே பெரிய நடிகராக இருந்தார். நடனம், நடிப்பு உள்பட அனைத்து துறைகளிலுமே அவரை பார்த்து பிரமித்து இருக்கிறேன். ஒரு காலத்தில் கமலுடன் ஒரே காரில் பயணித்ததையே பெருமையாக நினைத்து இருக்கிறேன். எப்போதுமே அவரை அந்த இடத்தில் தான் வைத்து இருக்கிறேன். அவரை முந்தியதாக நினைக்கவில்லை.

    இவ்வாறு ரஜினி கூறினார். #Rajinikanth #RajiniPolitics

    ×