search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railway policeman died"

    ஜோலார்பேட்டை பைக் மீது லாரி மோதிய விபத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் பலியானார்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே உள்ள சுந்தரம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் செந்தில்குமார் (42), ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர். இவரது மனைவி ஷாலினி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடும்பத்துடன் ஹயாத் நகரில் வசித்து வந்தார். நேற்று இரவு பைக்கில் திருப்பத்தூர் சென்று கொண்டிருந்தார்.

    அன்னாண்டபட்டி கூட்ரோடு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. லாரி டயர்கள் ஏறியதில் செந்தில்குமார் 2 கால்களும் நசுங்கியது.

    லாரியை நிறுத்திய டிரைவர் தப்பி ஓடி விட்டார். பொதுமக்கள் செந்தில்குமாரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்தார்.

    இதுதொடர்பாக, ஜோலார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×