search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puzhal Jail Prisoners Released"

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 5-வது கட்டமாக இன்று புழல் ஜெயிலில் இருந்து 14 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
    செங்குன்றம்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை யொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.

    அதன்படி முதல் கட்டமாக புழல் ஜெயிலில் இருந்து 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2-வது கட்டமாக புழல் ஜெயிலில் 52 கைதிகள் மற்ற ஜெயிலில் இருந்து 16 கைதிகள் என மொத்தம் 68 பேரும், 3-வது கட்டமாக 47 கைதிகளும், 4-வது கட்டமாக 11 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் 5-வது கட்டமாக இன்று புழல் ஜெயிலில் இருந்து 14 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் அறிவுரைகள் கூறி வழி அனுப்பி வைத்தார். விடுதலையான கைதிகளை உறவினர்கள் ஜெயில் வாசலில் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இதுவரை 207 ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    ×