search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public shocked by serial theft"

    • அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தி கண்டறிய வேண்டும்.
    • நள்ளிரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூர், காஸ்மோ காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான பிரேம்குமார்(19), தரணிதரன்(20) ஆகியோர் வீட்டில் செல்போன், லேப்டாப், கடிகாரம் ஆகியவையும், குனியமுத்தூர் கே. ஜி .கே ரோட்டை சேர்ந்த துரைக்கண்ணு (40) என்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 2 செல்போன் ரொக்கப்பணம் ரூபாய்13, 500 ஆகியவையும் திருட்டு போனது. தொடர் திருட்டால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கல்லூரி மாணவர்கள் இங்கு அறை எடுத்து தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களை சந்திக்கும் நோக்கத்தில் சாதாரணமாக ஒவ்வொரு மாணவரின் வீட்டிற்கும் பலரும் வந்து செல்வது வழக்கம்.

    இதனால் பெரும்பாலும் அவர்கள் தங்கி இருக்கும் அறையின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் எளிதாக திருடி விட்டு செல்கின்றனர். இதன் காரணமாக வெளியூரில் இருக்கும் மாணவர்களின் பெற்றோர் தங்களது மகன்களுக்கு போன் செய்து, பொருட்கள் பத்திரமாக உள்ளதா? என கேட்கின்றனர்.

    எத்தனையோ மாண வர்களின் செல்போன்கள் மற்றும் இதர பொருள்கள் காணாமல் போயுள்ளது. ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. தொடர் திருட்டு சம்பவங்களால் வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்வதற்கு மிகவும் பயமாக உள்ளது.

    இவ்வாறு திருடும் மர்ம நபர்களை போலீசார் கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும் நள்ளிரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தி மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்டறிய வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே திருட்டுக்களை தடுக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×