search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public participation"

    • ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியானது வாக்காளர் பட்டியலினை 100 சதவிகிதம் சரி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
    • காலை முதலே ஆர்வத்துடன் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியானது வாக்காளர் பட்டியலினை 100 சதவிகிதம் சரி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

    இப்பணியினை விரைந்து முடிக்கவும் பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம் தொடங்கியது. ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் வாக்கு–சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டு–ள்ளார்.

    அவரிடம் பொதுமக்கள் சென்று 6-பி படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர்.காலை முதலே ஆர்வத்துடன் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.

    ×