search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prohibition law"

    • ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முறையாகப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முறையாகப்பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் கடைவீதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 2.0 என்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் மாநில இணை செயலாளர் புருஷோத்தமன், கிரீஸ் சரவணன், மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பேசியதாவது:-

    தமிழகத்தில் மக்களை கடுமையாக பாதிக்கின்ற வகையில் தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மின் கட்டண உயர்வால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சாதாரணமாக இருநூறு ரூபாய் கட்டிய பொதுமக்கள் இன்று 500 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாதாமாதம் மின் கட்டணத்தை கணக்கிட்டால், கட்டண உயர்வு பொதுமக்களை பாதிக்காது. எனவே தமிழக அரசு மின் கட்டணத்தை மக்களை பாதிக்காத வகையில் உயர்த்த வேண்டும்.நீர் வீணாகும்போது காவிரியில் ஏன் தடுப்பணைகளை கட்டவில்லை. தடுப்ணைகளை கட்டி விட்டால் மணல் திருட முடியாது. இதனாலே தடுப்பணைகளை கட்டவில்லை.

    அவினாசி அத்திக்கடவு திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தத் திட்டத்திற்காக மக்கள் போராட்டம் நடத்திய போது இரண்டு முறை வந்து நானும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டேன். இப்படி நல்ல விஷயங்களுக்காக பா.ம.க. தொடர்ந்து போராடும்.மக்கள் வளர்ச்சியை மட்டுமே வைத்து பா.ம.க. செயல்படகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பல்லடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில், கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கும் வகையில் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. உதாரணமாக மத்திய அரசின் கல்வி நிலையங்களில் தகவல் தொடர்பு மொழியாக உள்ள ஆங்கிலத்திற்கு பதிலாக இனி இந்தியை பயன்படுத்த வேண்டும் என உத்தரவு போடப்பட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனக்கு தாய் மொழி தமிழ், நான் விருப்பப்பட்டு மற்ற மொழிகளை கற்கலாம். ஆனால் நீ இந்தி தான் கற்க வேண்டும் என சொல்வது போல உள்ளது.

    மத்திய அரசின் இந்த செயல், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வானொலி நிலையத்தில், தமிழ் நிகழ்ச்சிகளை 4 மணி நேரம் ரத்து செய்துவிட்டு அதில் இந்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கிறார்கள். அதை எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா? இப்படி இந்தி திணிப்பு செயலில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முறையாகப்பின் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தினால் இதுவரை 80 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மிகக் கடுமையான நடவடிக்கை அவசியம். அதேபோல போதைப் பொருள் தடுப்பு சட்டத்தை தமிழகத்தில் கடுமையாக பின்பற்ற வேண்டும். தமிழக சட்டசபையில் சபாநாயகர் நடுநிலையோடு நடக்க வேண்டும். அது இ.பி.எஸ். பிரச்சினையாக இருந்தாலும் சரி ஓ.பி.எஸ்.பிரச்சினையாக இருந்தாலும் சரி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×