என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » production deficit
நீங்கள் தேடியது "production deficit"
கரூர் மாவட்டத்தில் உற்பத்தி குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஒரம்புபாளையம், நல்லிக்கோவில் திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நிலங்களில் தென்னை பயிரிட்டு உள்ளனர். இதில் விளையும் தேங்காய்களை உடைத்து அதில் உள்ள தேங்காய் பருப்புகளை நன்கு உலர வைத்து திங்கட்கிழமை செயல்படும் சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை மையத்திற்கு கொண்டு சென்று, அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், அதேபோல் பிரபல எண்ணெய் நிறுவனங்களில் இருந்தும் ஏஜெண்ட்கள் வந்திருந்து ஏலம் எடுத்து செல்கின்றனர். மேலும் வியாபாரிகள் தேங்காய்களை லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா, கர் நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறுவெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த வாரம் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை தேங்காய் பருப்பு ரூ.9200-க்கு வாங்கி சென்றனர். இந்த வாரம் 100 கிலோ கொண்டதேங்காய்பருப்பு ரூ.9 ஆயிரத்து 500-க்கு வாங்கி சென்றனர். தேங்காய் உற்பத்தி குறைவின் காரணமாக தேங்காய்பருப்பு விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி குறைவின் காரணமாக தேங்காய் பருப்பு மற்றும் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஒரம்பு பாளையம், நல்லிக்கோவில் திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் தென்னை பயிரிட்டு உள்ளனர்.
இதில் விளையும் தேங்காய்களை உடைத்து அதில் உள்ள தேங்காய் பருப்புகளை நன்கு உலர வைத்து அருகாமையில் உள்ள சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாரத்தில் திங்கட்கிழமைகளில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை மையத்திற்கு கொண்டு சென்று அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர்.
ஏலம் எடுக்க தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் அதேபோல் பிரபல எண்ணெய் நிறுவனங்களில் இருந்தும் ஏஜெண்ட்கள் வந்திருந்து ஏலம் எடுத்து செல்கின்றனர். மேலும் வியாபாரிகள் தேங்காய்களை லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை தேங்காய் பருப்பு ரூ.8,500-க்கு வாங்கிசென்றனர். இந்த வாரம் 100 கிலோ கொண்ட தேங்காய் பருப்பு ரூ.8 ஆயிரத்து 700-க்கு வாங்கி சென்றனர். தேங்காய் உற்பத்தி குறைவின் காரணமாக தேங்காய் பருப்பு மற்றும் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் வெற்றிலை உற்பத்தி குறைவாலும் கோவில் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் அதிகமாக இருப்பதாலும் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்பு பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், என். புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இங்கு விளையும் வெற்றிலைகளை வேலாயுதம் பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், விவசாயிகள் அசோசியேசன் வெற்றிலை மண்டிக்கும் அனுப்பி வைக்கின்றனர். இப்பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக் கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மற்றும் ரெயில் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த வாரம் இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.5 ஆயிரத்துக்கும், முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை ரூ.2 ஆயிரத்திற்கும் அதேபோல் இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.2500-க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ரூ.1000-க்கும் வாங்கி சென்றனர்.
இந்த வாரம் இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.6ஆயிரத்திற்கும், முதிகால் வெள்ளக் கொடி வெற்றிலை ரூ.2500-க்கும் அதேபோல் இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.3,500க்கும் முதிகால் கற்பூரி வெற்றிலை ரூ.1500க்கும் வாங்கி சென்றனர்.
வெற்றிலை உற்பத்தி குறைவாலும் கோவில் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் அதிகமாக இருப்பதாலும் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் பகுதியில் வாழைத்தார் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, என் புகழுர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளுர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கும், வியாபாரிகளுக்கும் விற்பனை செய்கின்றனர்.
வாழைத் தோட்டத்தில் விளையும் வாழைத்தார்களை விவசாயிகளிடமிருந்து வியாபரிகள் வாங்கி லாரிகள் மூலம் தமிழ் நாட்டிலுள்ள திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, கோவை நாமக்கல், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த வாரத்தில் பூவன் வாழைத்தார் ரூ.350-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.400-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.350-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.500-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். நேற்று பூவன் வழைத்தார் ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.450-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.500-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ400-க்கும், மொந்தன் வாழைக்காய் ரூ.600-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். வாழைத்தார் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X