search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prize Distribution Ceremont"

    • வட்டாரகல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார்.
    • விடுப்பின்றி பள்ளிக்கு வந்தவர்கள், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பட்ட மளிப்பு மற்றும் பரிச ளிப்பு விழா நடை பெற்றது. வட்டாரகல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கி னார். ஊராட்சி தலைவர் பஞ்ச வர்ணம், முன்னாள் ஊராட்சி தலைவர் கலீல் ரகுமான், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பேபி மாலதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்த னர். தலைமை ஆசிரி யர் மோதிலால் வரவேற்றார். ஆசிரியை ஜரினாபானு செயல் பாட்டு அறிக்கை வாசித்தார்.

    நிகழ்ச்சியின் போது 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. மேலும் விடுப்பின்றி பள்ளிக்கு வந்தவர்கள், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து யோகா, கலை, நாடகம் நடைபெற்றது. விழாவில் யோகா மாஸ்டர் விஷ்ணு யோகா பயிற்சி அளித்தி ருந்தார். ஆசிரிய பயிற்றுனர் சுந்தரேஸ்வரி, இல்லம் தேடிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், தலைமை ஆசிரியைகள் இசபெல்லா, கலாராணி, முன்னாள் எஸ்.எம்.சி. தலைவர் முகம்மது உசேன் ராஜா, பள்ளி மேலா ண்மை குழு உறுப் பினர்கள், பெற்றோர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் துரைச்சி, அன்ன லட்சுமி, ஜெயக்குமார், இல்லம் தேடிக் கல்வி தன்னார் வலர்கள் சாந்தி, நபிசாள் பீவி, உமா மகேஸ்வரி ஆகியோர் செய்தி ருந்தனர்.

    ×