search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prices have gone"

    • மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளது என்று முத்தரசன் பேசினார்.
    • எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சேது ராமன் நினைவு திடலில் விவசாய தொழிலாளர்கள் சங்க 13-வது மாநில மாநாடு நிறைவு விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை வகித்தார்.

    இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்க தேசிய பொதுச்செயலாளர் குல்சார்சிங் கொரியா, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் முன்னிலை வகித்தனர்.

    மாநாட்டில் தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ள விவசாய தொழி லாளர்களின் சமூக பொருளாதார நிலைமை களை ஆய்வு செய்ய உயர்மட்ட ஆய்வு குழு அமைக்க வேண்டும், 100 நாள் திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆகவும், கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டது. பின்னர் முத்தரசன் பேசியதாவது:-

    விவசாய தொழிலா ளர்கள் அமைப்பு ரீதியாக அணி திரண்டால் எத்தகைய அரசியல் சூழலையும் எதிர்கொள்ள முடியும். 9 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.830 உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீது 260 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயருகிறது.

    மத்திய அரசின் தவறான கொள்கைகளால் முடிவால் விலைவாசி உயர்ந்துள்ளது. மாமன்னரிடம் குறுநில மன்னர்கள் பிச்சை கேட்பது போல அனைத்து மாநில முதல்வர்களும், பிரதமரிடம் சென்று நிதி தாருங்கள் என கெஞ்ச வேண்டிய நிலைமை உள்ளது.

    இவை எல்லாவற்றையும் எதிர்த்து, நாட்டின் நலனுக் காக நாம் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்த நாளான ஆகஸ்டு 9-ந்தேதி 'மோடியே வெளியேறு' என்ற போராட் டம் தொழிற்சங்கள் சார்பில் நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் நடைபெற உள்ளது.

    ஆகஸ்ட் 20-ல் இளைஞர் மற்றும் மாணவர் பெரு மன்றம் சார்பில் சென்னை யில் பேரணியும், அக்டோபர் 1, 2 தேதிகளில் மாதர் சங்க பேரணி நடைபெறுகிறது. விலைவாசி உயர்வு, வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி அரசை கண்டித்து செப்டம்பர் 12,13,14 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவகங்கள் முன் தொடர் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் எம்.பி.க்கள் சுப்பராயன், செல்வராஜ், சி.பி.ஐ. மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ராமச் சந்திரன், மாரிமுத்து, முன்னாள் எம்.பி.க்கள் லிங்கம், அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×