search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prevention of animal cruelty"

    • கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.
    • கால்நடை பன்முக பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த சங்கத்தில் உறுப்பினராக சோ்பவா்களுக்கு ஆண்டு சந்தாவாக ரூ.100, ஆயுள்கால சந்தாவாக ரூ.500 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர ஆா்வம் உள்ளவா்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×