search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "presentation ceremony"

    • மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
    • ஊராட்சி செயலர் தேன்மொழி, வார்டு உறுப்பினர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் என். மேலையூர் கிராமத்தில் பழவகை மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமூக சேவகர் வல்லத்தரசு காளிதாசன், தமிழ்செல்வி லெட்சுமணன் ஆகியோர் ஏற்பாட்டில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா சோமன் ஒவ்வொருவருக்கும் கொய்யா, எலுமிச்சை,நெல்லி சீத்தா மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் "ஊர்கூடி ஊரணி காப்போம்" என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வள்ளி துரைராஜ்,கலைஞர் கிராம திட்ட பொறுப்பு அலுவலர் விஜயகுமார், உதவி தோட்டகலை அலுவலர் ஜீவிதா, ஊராட்சி செயலர் தேன்மொழி, வார்டு உறுப்பினர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×