என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » practical problem
நீங்கள் தேடியது "practical problem"
மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். #cauverymanagementathority
புதுடெல்லி:
தமிழகம், கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு பொதுவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அளித்த உத்தரவின் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் 4 மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.
இதுதொடர்பாக, உறுப்பினர் பட்டியலை சமர்பிக்குமாறு மத்திய அரசு 4 மாநிலங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர் பட்டியல் மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலம் மட்டும் உறுப்பினர் பட்டியலை சமர்ப்பிக்காமல் தாமத்தித்து வந்ததால் மத்திய அரசின் கண்டனத்துக்கு ஆளானது..
இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய நீர்வளத்துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும், அதனை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் உள்ளதாகவும் குறிப்பிட்ட குமாரசாமி, ஆணையத்தில் மாற்றங்கள் செய்தால் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தில் இடம்பெறும் கர்நாடக உறுப்பினர்களின் பட்டியலை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றும் கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #cauverymanagementathority #cauverywater #karnatakaCM #kumaraswami
தமிழகம், கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு பொதுவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அளித்த உத்தரவின் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் 4 மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.
இதுதொடர்பாக, உறுப்பினர் பட்டியலை சமர்பிக்குமாறு மத்திய அரசு 4 மாநிலங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர் பட்டியல் மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலம் மட்டும் உறுப்பினர் பட்டியலை சமர்ப்பிக்காமல் தாமத்தித்து வந்ததால் மத்திய அரசின் கண்டனத்துக்கு ஆளானது..
இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய நீர்வளத்துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும், அதனை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் உள்ளதாகவும் குறிப்பிட்ட குமாரசாமி, ஆணையத்தில் மாற்றங்கள் செய்தால் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தில் இடம்பெறும் கர்நாடக உறுப்பினர்களின் பட்டியலை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றும் கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #cauverymanagementathority #cauverywater #karnatakaCM #kumaraswami
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X