search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poomalur"

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது
    • மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    உடுமலை :

    உடுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி அறிவித்துள்ளாா். மின்தடைபடும் பகுதிகள்: புஷ்பகிரி வேலன் நகா், சங்கா் நகா், காந்தி நகா்-2, போடிபட்டி, அண்ணா நகா், காமராஜ் நகா், பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, சுண்டாக்காம்பாளையம், இராகல்பாவி, குறிச்சிக் கோட்டை, புக்குளம்.

    • காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
    • செயற்பொறியாளா் சென்ராம் தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர் :

    பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாைள செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் சென்ராம் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளானது மங்கலம், பூமலூா், மலைக்கோயில், அக்ரஹாரப்புதூா், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துரை புதூா் ஆகிய பகுதிகள் ஆகும்.

    • கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது.
    • மாலை 5 மணிக்கு மதில்சுற்றி தேர்பவனி, திருப்பலி நடைபெறுகிறது.

    மங்கலம்,

    மங்கலத்தை அடுத்த பூமலூர் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவிற்கு கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் லாஷ் தலைமை தாங்கினார். பங்கு குருவுடன் இணைந்து குழந்தைசாமி, அருண், ஸ்டீபன் ஹென்றி டேனியல், பிலிப், க்ளாட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது.

    மேலும் வருகிற 11-ந்தேதி கூடடுப்பாடல் திருப்பலி, மின் அலங்கார தேர்பவனி நடைபெறவுள்ளது. பின்னர் வருகிற 12-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு கூட்டுப்பாடல் திருப்பலி, காலை 10 மணிக்கு வேண்டுதல் தேர், காலை 11 மணிக்கு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு மதில்சுற்றி தேர்பவனி, திருப்பலி நடைபெறுகிறது.

    ×