search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police negotiations"

    • போலீசார் தகவல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தியதால் ஆத்திரம்
    • 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    ஆரணி:

    ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தரணி குமார் (வயது 31). இவர் ஸ்ரீபெரும்புதூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுகன்யா.

    இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு லக்ஷ்மன் (2) தர்ஷன் என்ற 6 மாத கைக்குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி அதிகாலையில் வேலையை முடித்துவிட்டு சென்னையிலிருந்து ஆரணிக்கு வந்தார். பஸ்ஸிலிருந்து இறங்கி சென்னை ஆரணி சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் தரணி குமார் மீது மோதியது.

    இதில் தலையில் அடிபட்டு ரத்தக் வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இவரை மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். கடந்த 3-ந் தேதி நடந்த விபத்தை உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் போலீசார் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த தரணி குமாரின் உறவினர்கள் ஆரணி சென்னை சாலையில் 300க்கும் மேற்பட்டோர் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் தெரிவிக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    தகவலறிந்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×