என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMK. Chairman"

    • பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வருகை தென் தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அமையும் என தேனி.சை.அக்கீம் கூறினார்.
    • மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா ஏற்பாடு செய்கிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 116-வது ஜெயந்தி விழாவிற்கு முதல் முறையாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்த வருவது தென்தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் அமையும் என்று ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் தேனி.சை.அக்கீம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் 'மாலை மலர்' நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

    பசும்பொன் தேவர் திருமகனாரின் 116-வது ஜெயந்தி விழாவிற்கு முதல் முறையாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வருவது ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்ல, தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் அதேபோல் பொதுமக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது. ஏனென்றால் அன்புமணி ராமதாஸ் 5 ஆண்டு காலம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த பொழுது மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளார்.

    கிராமப்புற சுகாதார திட்டம், 108 ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு போன்ற எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியாத, மாற்றம் செய்ய முடியாத பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு வருவது தென் மாவட்ட கட்சியினர், பொதுமக்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. இவர் இதுபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்பது அனைவருடைய ஆவல். அதனை தலைவர் இரவு, பகல் பாராமல் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவானவர் என்பதை நிரூபிக்கும் வகையில் பணியாற்றி கொண்டிருக்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

    நாளை (30-ந்தேதி) தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவிற்கு தலைவர் தரைவழி போக்குவரத்து மூலமாக வருகிறார். வரும்பொழுது தென் தமிழகத்தின் முதன்மை நகரமாக திருச்சி மாவட்ட செயலாளர் உமாநாத் தலைவரை வரவேற்கிறார். சிறப்பான முறையில் வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்தி அவருடன் மதுரை வரை உடன் வருகிறார். அவருடன் திருச்சி மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் திலீப் குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் பிரின்ஸ் ஆகியோர் உடன் வருகின்றனர்.அதேபோல் மதுரையில் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.கே.தேவர் தலைமையில், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் நடராஜன், சமூக நீதிப் பேரவை மாநில துணைச்செயலாளர் ராஜ்குமார், மாநில பசுமைத்தாயத்தின் துணைச்செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் வரவேற்று சிறப்பான முறையில் வழிநடத்தி செல்கின்றனர்.

    இன்று (29-ந்தேதி) தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரையில் வந்து தங்கி நாளை காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.கே.தேவர் தலைமையில் மதுரை மாவட்ட செயலாளர்கள் ராஜா, அழகர்சாமி, செல்வம் ஆகியோரின் முன்னிலையில் மதுரை வன்னியர் சங்க தலைவர் நடராஜன், மாநில பசுமைத்தாயத்தின் துணைச்செயலாளர் சண்முகநாதன் ஆகியோரின் முன்னிலையில் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் திருமகனாரின் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து தென் மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன், பரமகுரு, சின்னத்துரை (தூத்துக்குடி), ஜோதி முத்து, சிவகுமார், கென்னடி (திண்டுக்கல்) மற்றும் திண்டுக்கல் மாவட்ட தலைவர்கள் வைரமுத்து, திருப்பதி மற்றும் சிவகாசி மாநகர மாவட்ட செயலாளர் டேனியல் ஆகியோருடைய சிறப்பான ஏற்பாட்டில் மதுரையில் இருந்து புறப்பட்டு சரியாக 11 மணிக்கு திருப்புவனம் வருகிறார்.

    திருப்புவனத்தில் சிவகங்கை மாவட்ட செயலாளர் ராஜசேகர் வரவேற்பு கொடுக்கிறார். அதை தொடர்ந்து அங்கிருந்து தென் மாவட்டத்தில் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வரும் மாநில பொருளாளர் திலகபாமா மேற்பார்வையில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் தலைமையில் மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் ராஜா, மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன், மாநில பசுமை தாயக துணைச் செயலாளர் பொறியாளர் கர்ண மஹாராஜன், மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட துணைத்தலைவர் திருப்பாலை அலி,

    மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், மாணவர் சங்க தலைவர் கபில்தேவ், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், இளைஞர் சங்க அமைப்பாளர் லட்சுமணன், சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம், சிறுபான்மை பிரிவு செயலாளர் வாப்பாசா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சகுபர் சாதிக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம் மற்றும் ராமநாதபுரம் நகரச் செயலாளர் பாலகுமாரன், கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன்,

    ராமேஸ்வரம் நகர செயலாளர் முருகன், மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் ஷெரீப், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மராஜ், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய செயலாளர் ஜிந்தா, திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், ராமநாதபுரம் நகர தலைவர் ராஜா ரபீக், கீழக்கரை நகர தலைவர் லத்தீப், ராமநாதபுரம் அமைப்பு செயலாளர் பாலா, நகர துணை செயலாளர் கார்த்திக், மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதோடு தொடர்ந்து 10 ஆண்டு காலம் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் சட்டமன்ற குழு தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கோ.க.மணி, சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை தருவதால் இந்த வருட தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா பாட்டாளி மக்கள் கட்சியின் திருவிழா போல் நடைபெறும். தேவர் திருமகனாரின் மண்ணில் பசும்பொன்னில் சுமார் 2000 கொடிக்கம்பங்கள் நடப்பட்டு அதோடு மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் மக்களுக்கு அன்னதானம் சிறப்பாக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா ஏற்பாடு செய்கிறார்.

    ஆகவே இந்த வருடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை மதுரை, ராமநாதபுரம் மற்றும் தென் மாவட்ட பகுதிகளில் சுவரொட்டி மற்றும் வண்ண ஒளி பதாகைகள், அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வருகை தென் தமிழகத்தை திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது.

    ×