search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pledge taking ceremony"

    • போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை
    • போலீசார் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் 'நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.

    மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் உறுதியளிக்கிறேன்" என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    நிகழ்ச்சியின் போது சப் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சேதுக்கரசன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    ×