search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "picket the train were arrested"

    • ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், நீர் திறந்து விட வலியுறுத்தியும் தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலை மையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரெயில் நுழைவு பகுதியில் போலீசார் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காளை மாடு சிலை அருகே தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஒன்று திரண்டு கர்நாடகா அரசை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி வந்தனர்.

    அப்போது அங்கு டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 2 பெண்கள், 20 ஆண்கள் என மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ×