search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People suffers"

    • மொட்டையகவுண்டன்பட்டியில் கடந்த பல மாதங்களாக அரசு டவுன் பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படுவதில்லை.
    • மீண்டும் அரசு டவுன் பஸ்களை வழக்கம்போல் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோபால்பட்டி அருகே மொட்டையகவுண்டன்பட்டி உள்ளது.இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் ஏராளமானோர் திண்டுக்கல்லுக்கு சென்று வருகின்றனர்.

    இதனை கருத்தில் கொண்டு இந்தப் பகுதியில் காலையில் இருந்து மாலை வரை 5 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக அரசு டவுன் பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படுவதில்லை.ஏதாவது ஒரே ஒரு நேரத்தில் மட்டும் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கெப்பையன் என்பவர் கூறுகையில், இந்த பகுதியில் கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் பெரும்பாலும் உள்ளனர்.இவர்கள் வேலை நிமித்தமாகவும் விவசாயம் சம்பந்தமாகவும் திண்டுக்கல் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக இந்தப் பகுதியில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் இங்கிருந்து திண்டுக்கலுக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் ஆட்டோவில் அதிக கட்டணம் செலுத்தி செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது.

    மீண்டும் அரசு டவுன் பஸ்களை வழக்கம்போல் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • முருக்கோடை கிராமத்தில் இருந்து வாழவந்தாள்புரம் வரையிலான சுமார் 3 கிமீ தொலைவிலான தார் சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
    • புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே முருக்கோடை கிராமத்தில் இருந்து வாழவந்தாள்புரம் வரையிலான சுமார் 3 கிமீ தொலைவிலான தார் சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.

    பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முருக்கோடை-வாழவந்தாள்புரம் இடையே புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. முதற்கட்டமாக பழைய தார் சாலை தோண்டி அகற்றப்பட்டது. அதன் பின்னர் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை.

    இதனால் வாழவந்தாள்புரம் கிராமத்திற்கு ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க முடியவில்லை. எனவே வெளியூர் செல்லும் பொதுமக்கள் பஸ்சிற்காக முருக்கோடை வரை நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த சாலை காரணமாக சிலிண்டர் வாகனங்கள் முருக்கோடை வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

    எனவே வாழவந்தாள்புரம் கிராம பொதுமக்கள் சிலிண்டர்களை வாங்கி அதனை தலைச்சுமையாக 3 கிமீ எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு முருக்கோடை-வாழவந்தாள்புரம் இடையே புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×