search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People gather at"

    • பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து இருந்தனர்.
    • சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சலாடி குதுகளித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து இருந்தனர்.

    இதை தொடர்ந்து குழந்தை களுடன் வந்து இருந்த அவர்கள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடினர். மேலும் பெண்கள் பலர் சறுக்கு விளையாடி ஒருவருக்கொருவர் குதுகளித்தனர்.

    பவானிசாகருக்கு இன்று காலை குறைந்த அளவே மக்கள் வந்து இருந்தனர். ஆனால் நேரம் செல்ல, செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண ப்பட்டது.

    இைததொடர்ந்து குடும்ப த்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல் புல் தரைகளிலும் சிறுவர்கள் பலர் விளையாடினர்.

    மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சலாடி குதுகளித்தனர். ெபாது மக்கள் அந்த பகுதி யில் இயற்கையை ரசித்து சென்றனர்.

    இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகையும் சுற்றுலா பயணிகள் ரசித்தனர். மேலும் அந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளையும் அவர்கள் ருசித்தனர்.

    இதனால் பவானிசாகர் பூங்கா பகுதியில் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.

    ×