search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passaenger arrest"

    போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்றவர் சென்னை விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார். #FakePassport
    சென்னை:

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானம் தயார் நிலையில் இருந்தது. அப்போது அங்கு வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்த கருணாகரன் என்பவர் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்ல அங்கு வந்தார். அப்போது அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அது போலி பாஸ்போர்ட் என தெரிய வந்தது.

    இதையடுத்து, அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #FakePassport
    ×