search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Part agents"

    • வருகிற 6-ந் தேதி தொகுதி வாரியாக பாக முகவர்கள் சிறப்பு கூட்டம் நடக்கிறது.
    • வாக்குச்சாவடி முகவர்களை அழைத்து வந்து தவறாமல் கலந்து கொள்ள செய்து சிறப்பிக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தொகுதி வாரியாக வருகிற 6-ந் தேதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், அமைச்சருமான மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தி.மு.க. தலைவர் வழிகாட்டுதலின் படி இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் முதல்-அமைச்ச்ா மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் வடக்கு மாவட்டத்தில் உள்ள மதுரை கிழக்கு, சோழவந்தான் மற்றும் மேலூர் சட்டமன்ற தொகுதி களுக்குட்பட்ட வாக்குச் சாவடி முகவர்களும் பங்கேற்க வேண்டியுள்ளது.

    இதனை முன்னிட்டு வடக்கு மாவட்டம் மேற்கண்ட தொகுதிக்கு உட்பட்ட சிறப்பு வாக்குச் சாவடி முகவர்களுக்கான சிறப்புக் கூட்டம் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கீழ்காணும் அட்டவ ணைப்படி நடைபெற உள்ளது.

    அதன்படி மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு அன்றைய தினம் காலை 10 மணிக்கு திருப்பாலை யாதவா பெண்கள் கல்லூரி அருகில் உள்ள குறிஞ்சி மகாலில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.

    சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான சிறப்பு கூட்டம் அலங்காநல்லூரில் உள்ள சுபிக்க்ஷா திருமண மஹாலில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மாலை 3 மணிக்கு மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான சிறப்பு கூட்டம் அங்குள்ள மூவேந்தர் பண்பாட்டு கழக திருமண மஹாலில் நடைபெற உள்ளது.

    இதில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அந்தந்த வாக்குச்சாவடி முகவர்களை அழைத்து வந்து தவறாமல் கலந்து கொள்ள செய்து சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×