search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parcel company"

    • தமிழ்ச்செல்வன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது
    • போலீசார் பரமேஸ்வரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்

    நம்பியூர்,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (37). டிரைவர். இவருக்கு திருமணம் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தமிழ்ச்செல்வன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இந்நிலையில் கடந்த 23-ந் தேதி காலை 9 மணி அளவில் அலங்கியம் எல்.பி.பி. வாய்க்கால் பகுதியில் தமிழ்ச்செல்வன் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து நம்பியூர் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது தமிழ்ச்செல்வன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது கோபிசெட்டி பாளையம் சின்ன மொடச்சூர் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் (42) என்பவர் தமிழ்ச்செல்வ னிடம் கடைசியாக 7 முறை செல்போனில் தொடர்புகொண்டு பேசியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் பரமேஸ்வரனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பரமேஸ்வரன் திருப்பூரில் உள்ள ஒரு லாரி பார்சல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவது தெரிய வந்தது.

    மேலும் இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வன், பரமேஸ்வ ரனின் மனைவியை தகாத உறவுக்கு அழைத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பரமே ஸ்வரன் தமிழ்ச்செல்வனை தொடர்புகொண்டு உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தற்கொலை க்கு தூண்டியது தெரிய வந்தது.

    இதையடுத்து நம்பியூர் போலீசார் பரமேஸ்வரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்ப ட்டார். 

    ×