search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parasurama"

    பரசுராமரின் இந்த மந்திரத்தை துதிப்பவர்கள் சொந்த வீடு, நிலம், சொத்துகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பல தீமைகளில் இருந்து காக்கப்படுவார்கள்.
    ஒவ்வொருவருக்கும் வசிப்பதற்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே பேராசை என்று கூறும் அளவிற்கு இக்காலத்தில் உலகத்தின் நிலைமை இருக்கிறது. அதிலும் பலரும் தங்களுக்கென்று சொத்தாக இருக்கிறது. நிலத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த நிலம் சம்பந்தமான சொத்துகளில் உறவினர்கள், எதிரிகள் என அனைவரும் பாக சண்டைக்கு வருகின்றனர். இப்படிப்பட்ட பிரச்சனைகளால் தவிப்பவர்கள் துதிக்க வேண்டிய “ஸ்ரீ பரசுராமர் மந்திரம்” இதோ.

    பரசுராமர் மந்திரம் ஓம் ராம் ராம்
    ஓம் ராம் ராம் ஓம் பரசு ஹஸ்தாய நமஹ

    விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஸ்ரீ பரசுராமர். ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் புதல்வராக அவதரித்தவர். சிவன் மீது தீவிர தவமியற்றி, அந்த சிவபெருமானிடமிருந்தே ஆற்றல் வாய்ந்த தவமியற்றி, மழு எனப்படும் கோடரி ஆயுதத்தை பெற்றவர். தாயை கொள் என்று தந்தை கூறியதும். தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தனது தாயின் தலையை கொய்தார். பின்பு தனது தந்தையிடம் தாய் ரேணுகா தேவியை உயிர்பிக்குமாறு கூறி தனது தாயை உயிர்ப்பிக்க செய்தார். பரசுராமரின் இந்த மந்திரம் துதிப்பவர்கள் பல தீமைகளில் இருந்து காக்கப்படுவார்கள்.
    ×